இம்மரபு பட்டியலில் காணப்பெறும் நான்காவது மன்னனாகிய பெரும்பிடுகு முத்தரையன் -1 குவாவன் மாறன் செந்தலை பகுதியை ஆண்டு வருகையில் குவாவன் மாறனின் தம்பியான குவாவன் சாத்தனின் தலைமையில் ,இளைய பரம்பரை திருச்சிராப்பள்ளி மாவட்டம் ,மலையடி பட்டியில் ஆண்டு வந்தனர் ,அவர்களுள் குவாவன் சாத்தனின் முதல் மகனக்கு சாத்தன் பூதி,என்ற பெயர் வழங்கியது .இவனக்கு விடேல் விடுகு இலங்கோவதிரையன் என்ற பட்டபெயர் இருந்தது .இக்குறுநில மன்னன் இளைய தலைமுறையில் முதல்வனாக கருதப் பெறுகிறான் .நார்த்தமலையில் விசயாலய சோழீசுவரம் என்று வழங்கும் சிவன் கோயிலை எடுபித்துல்லான் .இச்செய்தி இக்கோயிலில் காணப்பெறும் துவரபாலகச் சிற்பத்தின் பீடத்தில் எழுதப்பெற்றுள்ளது .அக்கல்வெட்டின் சரியான வாசகம்
"சாத்தன் பூதியான இலங்கோவதியரையர் எடுப்பித்த
கற்றளி மழை இடித்தழிய மல்லன் வந்துமன் ஆயின
தென்னவன் தமிழ் அதியரையன் புதுக்கு "
என்பதாகும் ,ஆகவே விசயாலய சோழிசுவரம் என்ற கற்றளி விசயாலய சோழனால் சோழீசுவரம் அமைக்கபெற்றதன்று .சாதன்பூபதி என்ற முத்தரைய மன்னனால் அமைக்கப்பெற்று மல்லன் விதுமன் என்பவனால் புதுபிக்கபெற்றது .பிற்காலத்தில் விசயாலய சோழீசுவரம் எனபெயர்பெற்றது .சாதன்பூதிக்கு பூதி அரிந்திகை என்னும் மகள் ஒருத்தி இருந்தால் ,தென்னாற்காடு மாவட்டம் திரு கோயிலூர் வீரட்டனேசுவரர் கோயிலில் காணப்பெறும் மூன்றாம் மூன்றாம் நந்திவர்மன் காலத்திய கல்வெட்டு ப்போதி அரிந்திகை அக்கோயிலுக்கு நிவந்தம் அளித்த செய்தியை கூறுகிறது .சாத்தன் பூதிக்கு சாத்தன் காளி என்ற பெயருடைய உடன்பிறந்தாள் ஒருத்தி இருந்தாள் ,இதனை திருகாட்டு பள்ளி அகினீசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்று 'நியமத்து ஆயிரத்தளி மகதேவர்க்கு விடேல் விடுகு முத்தரையன் மகளான சாத்தன் காளி ' என்று குறிபிடுகிறது .இம்மங்கை நியமத்து ஆயிரத்தளி இறைவர்க்கு நந்தா விளக்கு வைப்பதற்கு பதின் கழஞ்சு பொன் வைத்ததாகவும் அறிகிறோம் .
சாத்தன் பழியிலி - விடேல் விடுகு முத்தரையன் குவாவன் சாத்தனுடைய இராண்டாவது மகனவான் .இவன் புதுகோட்டை மாவட்டம் நார்தமலையில் குடைவரை கோயில் ஒன்றை அமைத்துள்ளான் .இதனை நிற்பதுங்கவர்மா பல்லவனின் ஏழாம் ஆண்டில் வரையபெற்ற நார்த்தாமலை கல்வெட்டால் அறிய முடிகிறது .இக்கோயில் "சாத்தான் பழியலிச்சுவரம் என்று அழைக்கப்பட்டது .சாத்தன் பழியிலியின் கல்வெட்டு இதுகாறும் ஒன்றும் கிடைக்கவில்லை .இக்கல்வேட்டிலும் கூட சாத்தன் பழியிலி பல்லவர்களின் விருதுபெயர்களை மேற்கொண்டதாகத் தெரியவில்லை .எனிவே சாத்தன் பழிய்லி நிருபதுங்க பள்ளவனக்கு அடங்கி ஆட்சி செய்ததாக கூறமுடியாது
பல்லவவரின் மேலாண்மையை விடுத்து தனிதாண்ட மன்னனாக கருதலாம்
சாத்தன் பழிலிக்குப் பழியிலி சிறியநங்கை என்னும் பெயரில் மகள் ஒருத்தி இருந்தாள் ,இம்மங்கை நல்லாள் ,மீனவன் தமிழ்திரையனான மல்லன் ஆனந்தனக்கு மணமுடிக்கபெற்றாள் .இவ்விருவருக்கும் அனந்தன் பழியிலி என்ற மகனோ மகளோ இருந்ததாக தெரிகிறது .தனது தந்தை சாத்தன் பழியிலியால் அமைக்கப்பெற்ற நார்த்தாமலை குடைவரை கோயிலின் முகமண்டபத்தினை பழியிலி சிறிய நங்கை அமைத்துள்ளான் .இதனை நார்த்தாமலை மேல்மலை குன்றில் அமைந்துள்ள குடைவரைக் கோயிலின் முன்மண்டபத்து வடக்குச் சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றினால் அறிய முடிகிறது .
தனது ஆட்சியின் தொடக்க காலத்தில் பல்லவருக்கு அடங்கிய சிற்றரசனாக இருந்த சாத்தன் பழயிலி தனது வலிமையை பெருக்கி முத்தரையரின் தனியாட்சியை ஏற்படுத்தியதாக தெரிகிறது .தஞ்சையை விசயாலயன் வெற்றிகொண்டபின் முத்தரையர்கள் புதுகோட்டைப் பகுதிக்கு சென்று இருக்கவேண்டும் சாத்தன் பழிலியின் இறுதி காலத்தில் முத்தரையர் வீழுசியுற்றனர் எனக்கூறலாம் .பல்லவ வேந்தன் நிருபதுங்கவர்மனும் ச்சீரிவள்ளபனும் சாத்தன் பழிலியின் உடன் காலத்தவர் ஆவர் .சாத்தன் பழியிலி ஏறத்தாழ கி.பி 830 முதல் 860வரை ஆட்சி புரிந்துள்ளார் .
"சாத்தன் பூதியான இலங்கோவதியரையர் எடுப்பித்த
கற்றளி மழை இடித்தழிய மல்லன் வந்துமன் ஆயின
தென்னவன் தமிழ் அதியரையன் புதுக்கு "
என்பதாகும் ,ஆகவே விசயாலய சோழிசுவரம் என்ற கற்றளி விசயாலய சோழனால் சோழீசுவரம் அமைக்கபெற்றதன்று .சாதன்பூபதி என்ற முத்தரைய மன்னனால் அமைக்கப்பெற்று மல்லன் விதுமன் என்பவனால் புதுபிக்கபெற்றது .பிற்காலத்தில் விசயாலய சோழீசுவரம் எனபெயர்பெற்றது .சாதன்பூதிக்கு பூதி அரிந்திகை என்னும் மகள் ஒருத்தி இருந்தால் ,தென்னாற்காடு மாவட்டம் திரு கோயிலூர் வீரட்டனேசுவரர் கோயிலில் காணப்பெறும் மூன்றாம் மூன்றாம் நந்திவர்மன் காலத்திய கல்வெட்டு ப்போதி அரிந்திகை அக்கோயிலுக்கு நிவந்தம் அளித்த செய்தியை கூறுகிறது .சாத்தன் பூதிக்கு சாத்தன் காளி என்ற பெயருடைய உடன்பிறந்தாள் ஒருத்தி இருந்தாள் ,இதனை திருகாட்டு பள்ளி அகினீசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்று 'நியமத்து ஆயிரத்தளி மகதேவர்க்கு விடேல் விடுகு முத்தரையன் மகளான சாத்தன் காளி ' என்று குறிபிடுகிறது .இம்மங்கை நியமத்து ஆயிரத்தளி இறைவர்க்கு நந்தா விளக்கு வைப்பதற்கு பதின் கழஞ்சு பொன் வைத்ததாகவும் அறிகிறோம் .
சாத்தன் பழியிலி - விடேல் விடுகு முத்தரையன் குவாவன் சாத்தனுடைய இராண்டாவது மகனவான் .இவன் புதுகோட்டை மாவட்டம் நார்தமலையில் குடைவரை கோயில் ஒன்றை அமைத்துள்ளான் .இதனை நிற்பதுங்கவர்மா பல்லவனின் ஏழாம் ஆண்டில் வரையபெற்ற நார்த்தாமலை கல்வெட்டால் அறிய முடிகிறது .இக்கோயில் "சாத்தான் பழியலிச்சுவரம் என்று அழைக்கப்பட்டது .சாத்தன் பழியிலியின் கல்வெட்டு இதுகாறும் ஒன்றும் கிடைக்கவில்லை .இக்கல்வேட்டிலும் கூட சாத்தன் பழியிலி பல்லவர்களின் விருதுபெயர்களை மேற்கொண்டதாகத் தெரியவில்லை .எனிவே சாத்தன் பழிய்லி நிருபதுங்க பள்ளவனக்கு அடங்கி ஆட்சி செய்ததாக கூறமுடியாது
பல்லவவரின் மேலாண்மையை விடுத்து தனிதாண்ட மன்னனாக கருதலாம்
சாத்தன் பழிலிக்குப் பழியிலி சிறியநங்கை என்னும் பெயரில் மகள் ஒருத்தி இருந்தாள் ,இம்மங்கை நல்லாள் ,மீனவன் தமிழ்திரையனான மல்லன் ஆனந்தனக்கு மணமுடிக்கபெற்றாள் .இவ்விருவருக்கும் அனந்தன் பழியிலி என்ற மகனோ மகளோ இருந்ததாக தெரிகிறது .தனது தந்தை சாத்தன் பழியிலியால் அமைக்கப்பெற்ற நார்த்தாமலை குடைவரை கோயிலின் முகமண்டபத்தினை பழியிலி சிறிய நங்கை அமைத்துள்ளான் .இதனை நார்த்தாமலை மேல்மலை குன்றில் அமைந்துள்ள குடைவரைக் கோயிலின் முன்மண்டபத்து வடக்குச் சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றினால் அறிய முடிகிறது .
தனது ஆட்சியின் தொடக்க காலத்தில் பல்லவருக்கு அடங்கிய சிற்றரசனாக இருந்த சாத்தன் பழயிலி தனது வலிமையை பெருக்கி முத்தரையரின் தனியாட்சியை ஏற்படுத்தியதாக தெரிகிறது .தஞ்சையை விசயாலயன் வெற்றிகொண்டபின் முத்தரையர்கள் புதுகோட்டைப் பகுதிக்கு சென்று இருக்கவேண்டும் சாத்தன் பழிலியின் இறுதி காலத்தில் முத்தரையர் வீழுசியுற்றனர் எனக்கூறலாம் .பல்லவ வேந்தன் நிருபதுங்கவர்மனும் ச்சீரிவள்ளபனும் சாத்தன் பழிலியின் உடன் காலத்தவர் ஆவர் .சாத்தன் பழியிலி ஏறத்தாழ கி.பி 830 முதல் 860வரை ஆட்சி புரிந்துள்ளார் .

