Sunday, April 8, 2012

இம்மரபு பட்டியலில் காணப்பெறும் நான்காவது மன்னனாகிய பெரும்பிடுகு முத்தரையன் -1 குவாவன் மாறன் செந்தலை பகுதியை ஆண்டு வருகையில் குவாவன் மாறனின் தம்பியான குவாவன் சாத்தனின் தலைமையில் ,இளைய பரம்பரை திருச்சிராப்பள்ளி மாவட்டம் ,மலையடி பட்டியில் ஆண்டு வந்தனர் ,அவர்களுள் குவாவன் சாத்தனின் முதல் மகனக்கு சாத்தன் பூதி,என்ற பெயர் வழங்கியது .இவனக்கு விடேல் விடுகு இலங்கோவதிரையன் என்ற பட்டபெயர் இருந்தது .இக்குறுநில மன்னன் இளைய தலைமுறையில் முதல்வனாக கருதப் பெறுகிறான் .நார்த்தமலையில் விசயாலய சோழீசுவரம் என்று வழங்கும் சிவன் கோயிலை எடுபித்துல்லான் .இச்செய்தி இக்கோயிலில் காணப்பெறும் துவரபாலகச் சிற்பத்தின் பீடத்தில் எழுதப்பெற்றுள்ளது .அக்கல்வெட்டின் சரியான வாசகம்


"சாத்தன் பூதியான இலங்கோவதியரையர் எடுப்பித்த 
கற்றளி மழை இடித்தழிய மல்லன் வந்துமன் ஆயின
தென்னவன் தமிழ் அதியரையன் புதுக்கு "


என்பதாகும் ,ஆகவே விசயாலய சோழிசுவரம் என்ற கற்றளி விசயாலய சோழனால் சோழீசுவரம் அமைக்கபெற்றதன்று .சாதன்பூபதி   என்ற முத்தரைய மன்னனால் அமைக்கப்பெற்று  மல்லன் விதுமன் என்பவனால் புதுபிக்கபெற்றது .பிற்காலத்தில் விசயாலய சோழீசுவரம் எனபெயர்பெற்றது .சாதன்பூதிக்கு பூதி அரிந்திகை என்னும் மகள் ஒருத்தி இருந்தால் ,தென்னாற்காடு  மாவட்டம் திரு கோயிலூர்  வீரட்டனேசுவரர் கோயிலில் காணப்பெறும் மூன்றாம் மூன்றாம் நந்திவர்மன் காலத்திய கல்வெட்டு ப்போதி அரிந்திகை அக்கோயிலுக்கு நிவந்தம் அளித்த செய்தியை கூறுகிறது .சாத்தன் பூதிக்கு சாத்தன் காளி என்ற பெயருடைய உடன்பிறந்தாள் ஒருத்தி இருந்தாள் ,இதனை திருகாட்டு பள்ளி அகினீசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்று 'நியமத்து  ஆயிரத்தளி  மகதேவர்க்கு விடேல் விடுகு முத்தரையன் மகளான சாத்தன் காளி ' என்று குறிபிடுகிறது .இம்மங்கை நியமத்து ஆயிரத்தளி  இறைவர்க்கு நந்தா விளக்கு வைப்பதற்கு பதின் கழஞ்சு  பொன் வைத்ததாகவும்  அறிகிறோம் .


சாத்தன் பழியிலி - விடேல் விடுகு முத்தரையன் குவாவன்  சாத்தனுடைய  இராண்டாவது  மகனவான் .இவன் புதுகோட்டை மாவட்டம் நார்தமலையில் குடைவரை  கோயில் ஒன்றை அமைத்துள்ளான் .இதனை  நிற்பதுங்கவர்மா பல்லவனின்  ஏழாம் ஆண்டில்  வரையபெற்ற நார்த்தாமலை கல்வெட்டால் அறிய முடிகிறது .இக்கோயில் "சாத்தான் பழியலிச்சுவரம் என்று அழைக்கப்பட்டது .சாத்தன் பழியிலியின்  கல்வெட்டு இதுகாறும் ஒன்றும் கிடைக்கவில்லை .இக்கல்வேட்டிலும் கூட சாத்தன் பழியிலி  பல்லவர்களின் விருதுபெயர்களை  மேற்கொண்டதாகத்  தெரியவில்லை .எனிவே சாத்தன் பழிய்லி  நிருபதுங்க  பள்ளவனக்கு அடங்கி ஆட்சி செய்ததாக  கூறமுடியாது  
பல்லவவரின் மேலாண்மையை  விடுத்து தனிதாண்ட மன்னனாக கருதலாம் 


     சாத்தன் பழிலிக்குப் பழியிலி   சிறியநங்கை என்னும் பெயரில் மகள் ஒருத்தி இருந்தாள் ,இம்மங்கை நல்லாள் ,மீனவன்  தமிழ்திரையனான  மல்லன் ஆனந்தனக்கு  மணமுடிக்கபெற்றாள்  .இவ்விருவருக்கும் அனந்தன் பழியிலி  என்ற மகனோ மகளோ இருந்ததாக தெரிகிறது .தனது தந்தை சாத்தன்  பழியிலியால் அமைக்கப்பெற்ற நார்த்தாமலை குடைவரை கோயிலின்  முகமண்டபத்தினை  பழியிலி சிறிய நங்கை அமைத்துள்ளான் .இதனை  நார்த்தாமலை மேல்மலை குன்றில் அமைந்துள்ள  குடைவரைக்  கோயிலின்  முன்மண்டபத்து  வடக்குச் சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றினால்  அறிய முடிகிறது .


தனது  ஆட்சியின் தொடக்க காலத்தில் பல்லவருக்கு அடங்கிய சிற்றரசனாக இருந்த சாத்தன் பழயிலி  தனது  வலிமையை  பெருக்கி   முத்தரையரின் தனியாட்சியை  ஏற்படுத்தியதாக தெரிகிறது .தஞ்சையை விசயாலயன் வெற்றிகொண்டபின்  முத்தரையர்கள் புதுகோட்டைப் பகுதிக்கு சென்று இருக்கவேண்டும் சாத்தன் பழிலியின் இறுதி  காலத்தில் முத்தரையர்  வீழுசியுற்றனர்  எனக்கூறலாம் .பல்லவ வேந்தன் நிருபதுங்கவர்மனும் ச்சீரிவள்ளபனும் சாத்தன் பழிலியின்  உடன் காலத்தவர் ஆவர் .சாத்தன்  பழியிலி  ஏறத்தாழ கி.பி 830  முதல் 860வரை  ஆட்சி புரிந்துள்ளார் .

Friday, April 6, 2012

செந்தலைதூண்  கல்வெட்டு ;-  செந்தலை சுந்தரேஸ்வரர் கோயில் முன் மண்டபத்தில் காணப்பெறும்  நான்கு தூண்களின் அடிப்பாகங்கள்  சிதைந்து காணப்பெறுகின்றன ,அவைகள் சிதையாமல் இருந்திருந்தால் 27  வெண்பாக்கள்   நமக்கு கிடைத்திருக்கும் ,இந்த நான்கு தூண்களில்  காணப்பெறும் கல்வெட்டுக்கள் ,சுவரன் மாறன்  நியமத்தில் பிடாரி கோயில் ஒன்று எடுபித்த செய்தியை தெரிவிக்கின்றன ,மற்றும் தான் வெற்றிகொண்ட ஊர்களின் பெயர்களையும் கல்லில் வெட்டும்படி ஆனையி ட்டுல்லான்  .அதனை சுவரன் மாறானவன் எடுபித்த பிடாரி கோயில் அவனேரிந்த ஊர்களும் அவன் பேர்களும்  அவனை பாடினர் பேர்களும்  இதூங்கன் மேலேழுதின இவை " என அக்கல்வெட்டு கூறுகிறது இக்கல்வெட்டுகளில் சுவரன் மாறன் கீழ்கண்ட பட்டங்களை மேற்கொண்டுள்ளான் .


  (1 ) சிரீசத்துரு மன்னன் (2 )சிறீ கள்வர் கள்வன் (3 )  சிறீ அதிகாசன் .மேலும் பத்து பட்ட பெயர்களையும் அக்கல்வேட்டுக்கள் குறிப்பிடுகின்றன .அவையாவன சிறீ மாறன் ,அபிமான தீரன் ,சத்துரு கேசரி ,தமராளன் ,செருமாரன்  வேலு மாறன் ,சாத்தன் மாறன் ,தஞ்சை கோன்,வல்லக்கோன்,வான்மாரன் முதலியனவாகும் .சுவரன் மாறனை பற்றி மூன்று தமிழ் புலவர் பாடியுள்ளதாக அவனிடைய கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம் .


1 ) திருச்சி மாவட்டத்தில் உள்ள  பாசில் வேல் நம்பி 
2 ) கோட்டாற்று இளம் பெருமானார் 
3 )  கிழார்க்  கூற்றத்துப் பவதாயமங்கல்த்து  குவாவன் காஞ்சன்  


மேற்  கூறப்பெற்ற  விருது பெயர்களையும் ,சுவரன் மாறனை பற்றிப்  பாடிய புலவர்களையும் ஆதாரமாக கொண்டு இகுறுநில மன்னர் ஒரு பெரும் பேரரசனாகத்  திகழ்ந்தான்  என்று நடன காசிநாதன் கூறுகிறார் ."முத்தரைய அரசர்களுள் இவன்  பெரும் பேரரசனகத் திகழந்தவன் என்று கூறலாம் ,பல்லவ மன்னர்களுள்  முதலாம் நரசிம்மவர்மனுக்கும் ,சோழ   மன்னர்களுள்  முதலாம் ராசராசனுக்கும் பாண்டிய மன்னர்களுள் மாறவர்மன்  சுந்தரபாண்டியனுக்கும்  இவனை ஒப்பிடலாம் .தமிழ் புலவர்களை ஆதரித்து தனது வெற்றிகளை குறிக்கும் செய்திகளை வெண்பாக்களில் எழுதி பொரிக்க செய்த செய்கையால் வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மன்னர்கள்  அனைவரையும் இவன் விஞ்சி நிற்கிறான் ".




     
மாறன் குவாவனை அடுத்து குவாவன்மாறன் ஆட்ச்சிக்கு வந்தான் .பெரும்பிடுகு முத்தரையன் என்னும்  பட்டப்பெய்ரினை பூண்டிருந்தான் .இவன் இரண்டாம் நந்திவர்மப் பல்லவனக்கும் முதலாம் ராசா சிம்ம பாண்டியனுக்கும் உடன் காலத்திணன் ஆவான் ,இவனது பெயரிலுள்ள குவாவன் இவனுடிய தந்தையை குறிப்பதாகவும் மாறன் என்னும் பெயர் இவனது பாட்டனை குறிப்பதாகவும் கொள்ளலாம் . 

இளங்கோயதி அரையன் மாறன் பரமேஸ்வரன் ;- குவாவன் மாறன் மைந்தனான மாறன் பரமேஸ்வரன் தன் தகப்பனுக்கு பிறகு மன்னன் ஆனான் .செந்தலை கல்வெட்டு இவ்வேந்தனை குவாவன் மாறனவன் மகன் இலங்கோயதிரைய னாயின் மாறன் பரமேசுரன் என்று குறிப்பிடுகின்றது .இரண்டாம் நந்திவர்மப் பல்லவனுடைய "பரமேசுவரன் " என்னும் விருது பெயரினை மேற்கொண்டான் என்பது புலனாகும் .முதரேய் மன்னர் களுக்குள் பெரும் புகழ் பெற்ற பெரும் பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் என்றவனை ஈன்றெடுத்த பெருமையும் புகழும் இம்ம்மன்னனை சார்ந்ததாகும் .

பெரும்பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் ;- இம்மன்னனைப் ப ற்றிய  செய்திகள் செந்தலை கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளன .இவை அனைத்தும் பாவடிவிலேயே அமைந்துள்ளன .இவற்றுள் சில சிதைந்துள்ளன ."வீரத்தின்  உளைக்களனாக  ,வெற்றியின்  நிலைக்களனாக வாழ்ந்த இவ்வற்றால் மறவன் களம் பல கண்டு வெற்றி பல கொண்டு போரில் பெரும் பங்கு வகித்தான் " என  இராச  சேகர தங்கமணி கூறுவார் .

சுவரன் மாறனுடைய  செந்தலை கல்வெட்டில்  சுவரன் மாறன்  பாண்டியர்கள் மீதும்  சேரநாட்டு அரசன்  மீதும்  கீழ்கண்ட இடங்களில் வெற்றி பெற்றான்  எனகூறபட்டுள்ளது ,அவ்விடங்களாவன  கொடும்பாளூர் ,மணலூர் ,திங்களூர் ,காந்தளூர் ,அழுந்தியூர் ,காரை மரங்கூர்  ,அண்ணல்வாயல் ,செம்பொன்மாரி ,தஞ்சை ,செம்புல நாட்டு  வென்கோடல் ,புகலி ,கண்ணனூர் முதலியன ,இவ்விடங்களில் எல்லாம் தஞ்சை ,புதுகோட்டை ,திருச்சி ,ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்றும் உள்ளன .செந்தலை  கல்வெட்டு  சுவரன் மாறனால் ஆதரிக்கப் பெற்ற  கவிஞர்களால்  ஆக்கபெற்ற  மெய்கீர்த்திகள்   என்று கொண்டாலும்  அவைகள் முற்றிலும்  வரலாற்று  உண்மைகள்  .

சுவரன் மாறன் பல்லவ  மன்னன்  இரண்டாம் நந்தி வரமனுடைய படை தலைவனுடன்  சேர்ந்து மேற் கூரபெற்ற இடங்களில் வேடர்களை பெற்று பல்லவ பேரரசை  நிலை பெற செய்தான் எனக்கூறலாம் .

Friday, March 30, 2012

niyamam pidaari amman temple
முத்தரையர் அரசர்களில் சக்கரவர்த்தியாக திகழ்ந்த பெரும்பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் இவர்  பல்லவ மன்னர்களுள் முதலாம் நரசிம்ம வர்மன் சோழ மன்னர்களுள் முதலாம் முதலாம் ராசராசனக்கும் பாண்டியர்களுள் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கும் ஒப்பானவன் இவன்தான் நியமத்தில் பிடாரி கோயிலை நிறுவினான் இது செந்தலை சுந்தரேஸ்வரர் கோயில் முன் மண்டபத்தில் காணப்பெறும் .செந்தலை கல்வெட்டுகளில் "சுவரன் மாறன்னானவன் எடுபித்த பிடாரிகோயில் அவநெரிந்த ஊர்களும் அவன் பேர்களும் அவனை பாடினர் பேர்களும் இத்தூண்கள் மேலுழுதின இவை "என அக்கல்வெட்டு கூற்கின்றது      

Thursday, March 29, 2012

முத்தரைய இனத்தின் நான்காவது மன்னன் பெரும்பிடுகு முத்தரையன் -1எனப்படும் குவாவன்மாறன் நார்த்தாமலையில் விசயலாய சோழிசுவரம் என்று வழங்கும் சிவன் கோயிலை எடுபித்துள்ளான் .இச்செய்தி இக்கோயிலில் காணப்பெறும் துவாரபாலகச் சிற்பத்தின் பீடத்தில் எழுதபெற்றுள்ளது
.அக்கல்வெட்டின் சரியான வாசகம் ,


"சாத்தன் பூதியான இலங்கோவதியரையரை எடுப்பித்த
கற்றளி மழை இடித்தழிய மல்லன் வந்துமன் ஆயின
தேனவன் தமிழ் அதியரையன் புதுக்கு "


  
அறிமுகம் ;- பழந்தமிழ்  குடியினரான முத்தரையரது வரையா வன்மை ,"பெருமுத்தரையர்  பெரிது வந்தீயும் கருணைச் சோறு ,என்று பதினெண் கீழ் கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நாலடியாரில் பெரிதும் புகழப்பட்டுள்ளது .