பூதி களரி ,சாத்தன் பூதியின் மகனாவான் ,இவனக்கு அமரீன்ரி முத்தரையன் என்ற பட்டப்பெயரும் இருந்தது ,சாத்தன் பூதியும் ,பூதி களரியும் ஒருவரே என்ற கருத்து பொருத்தம் உடையதன்று என்று ராசசேகர தங்கமணி கூறுவர்.பூதிகளறி பல்லவ வேந்தன் நிருபதுங்க வர்மன் காலத்தவன் ஆவான் .இந்த முத்தரைய தலைவனை பற்றி அறிந்து கொள்வதருக்கு பல கல்வெட்டுகள் துணை செய்கின்றன .இவற்றுள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருசின்னம்பூண்டி ,செந்தலை,திருச்சோற்றுத்துறை ,திருகோடிகாவல் முதலிய இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் முக்கியமானவியாகும் .இவற்றை ஆராயிந்து பார்த்தால் பூதி களரி பல்லவ மேலான்மைலிருந்து விடுதலைபெற்ற வேந்தனாக புதுக்கோட்டைப் பகுதியில் ஆட்சி புரிந்தான் என்பது விளங்குகிறது .கலையார்வம் மிக்க இவ்வேந்தன் புதுகோட்டை மாவட்டம் பூவாளைகுடியில் புட்பவனேசுவரர் குடைவரை கோயிலிலை குடைவிக்க செய்தான் என்பது விளங்குகிறது .
தென்னவன் இளங்கோ முத்தரையன் ;- முத்தரைய தலைவருள் புக்ழ்பெற்றவனாகிய தென்னவன் இளங்கோ முத்தரையன் பல்லவ பாண்டியர்க்கு அடங்காமல் தனிதாண்ட மன்னன் ,இரண்டாம் பெரும்பிடுகு முதரையனான சுவரன் மாறனே இளங்கோ முத்தரையன் எனச் சிலர் கருதுகின்றனர் .பெரும்பிடுகு முதரையனின் பட்டபெயர் பலவற்றுள் இளங்கோ முத்தரையன் ஏன்னு பெயர் இடம் பெற்றமையாலும் ,பெரும்பிடுகு முத்தரையன் பல்லவருக்கு அடங்கிய மன்னனாகவே தெரிவதால் இக்கருத்து பொருத்தமாக தோன்றவில்லை ,அடுத்து பெரும்பிடுகு முத்தரையன் (சுவரன் மாறன் )நியமத்தில் அமைத்த பிடாரி கோயிலுக்கு இளங்கோ முத்தரையன் தானம் அளித்துள்ள செய்தி செந்தலை கல்வெட்டால் அறியபடுகிறது .இதில் இளங்கோ முத்தரையன் இக்கோயிலை கட்டியதாக கூறபடாமையால் ,பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறனும் ,இளங்கோ முத்தரையனும் ஒருவனாக இருக்க முடியாது என திரு ,கோவிந்த சாமீ கருதுவர் .
விடேல்விடுகு முத்தரையனான குவாவன் சாத்தனே இளங்கோ முத்தரையன் ஆவான் என்று கூறுகிறார் ,இதனை உறுதி படுத்த இவனது 13ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் தஞ்சை மாவட்டம் திருச்சின்னம் பூண்டியிலும் திருகொடிக் காவலிலும் புதுக்கோட்டை கீரனுரிலும் கிடைத்துள்ளன .இவனுடைய 17 ,18 -ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுக்கள் திருகோடிக்காவலிலும் ,செதந்தலையிலும் கிடைத்துள்ளன .
இத்தலைவனது திருசின்னபூண்டி கல்வெட்டில் எயில் நாட்டு அட்டுபள்ளி அரிஞ்சிகைபுரம் என்ற தொடர் காணப்பெறுகிறது .இம்மண்ணின் ஆட்சிகாலம் ஆதித்த சோழனுக்கும் முதலாம் பராந்தக சோழனுக்கும் இடைப்பட்ட காலத்தில் கி.பி 880 முதல் 900 ஆண்டு வரையில் இவரது ஆட்சி காலம் .
இளங்கோ முத்தரையனுக்கு உத்தமானி என்னும் பட்டபெயர் வழங்கி வந்தது
.இதனை தஞ்சை மாவட்டம் திருசோற்றுத்துரையில் கோயில் காணப்பெறும் ஒரு கல்வேட்டைகொகொண்டு உணரலாம்
தென்னவன் இளங்கோ முத்தரையன் ;- முத்தரைய தலைவருள் புக்ழ்பெற்றவனாகிய தென்னவன் இளங்கோ முத்தரையன் பல்லவ பாண்டியர்க்கு அடங்காமல் தனிதாண்ட மன்னன் ,இரண்டாம் பெரும்பிடுகு முதரையனான சுவரன் மாறனே இளங்கோ முத்தரையன் எனச் சிலர் கருதுகின்றனர் .பெரும்பிடுகு முதரையனின் பட்டபெயர் பலவற்றுள் இளங்கோ முத்தரையன் ஏன்னு பெயர் இடம் பெற்றமையாலும் ,பெரும்பிடுகு முத்தரையன் பல்லவருக்கு அடங்கிய மன்னனாகவே தெரிவதால் இக்கருத்து பொருத்தமாக தோன்றவில்லை ,அடுத்து பெரும்பிடுகு முத்தரையன் (சுவரன் மாறன் )நியமத்தில் அமைத்த பிடாரி கோயிலுக்கு இளங்கோ முத்தரையன் தானம் அளித்துள்ள செய்தி செந்தலை கல்வெட்டால் அறியபடுகிறது .இதில் இளங்கோ முத்தரையன் இக்கோயிலை கட்டியதாக கூறபடாமையால் ,பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறனும் ,இளங்கோ முத்தரையனும் ஒருவனாக இருக்க முடியாது என திரு ,கோவிந்த சாமீ கருதுவர் .
விடேல்விடுகு முத்தரையனான குவாவன் சாத்தனே இளங்கோ முத்தரையன் ஆவான் என்று கூறுகிறார் ,இதனை உறுதி படுத்த இவனது 13ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் தஞ்சை மாவட்டம் திருச்சின்னம் பூண்டியிலும் திருகொடிக் காவலிலும் புதுக்கோட்டை கீரனுரிலும் கிடைத்துள்ளன .இவனுடைய 17 ,18 -ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுக்கள் திருகோடிக்காவலிலும் ,செதந்தலையிலும் கிடைத்துள்ளன .
இத்தலைவனது திருசின்னபூண்டி கல்வெட்டில் எயில் நாட்டு அட்டுபள்ளி அரிஞ்சிகைபுரம் என்ற தொடர் காணப்பெறுகிறது .இம்மண்ணின் ஆட்சிகாலம் ஆதித்த சோழனுக்கும் முதலாம் பராந்தக சோழனுக்கும் இடைப்பட்ட காலத்தில் கி.பி 880 முதல் 900 ஆண்டு வரையில் இவரது ஆட்சி காலம் .
இளங்கோ முத்தரையனுக்கு உத்தமானி என்னும் பட்டபெயர் வழங்கி வந்தது
.இதனை தஞ்சை மாவட்டம் திருசோற்றுத்துரையில் கோயில் காணப்பெறும் ஒரு கல்வேட்டைகொகொண்டு உணரலாம்
No comments:
Post a Comment